எதிர்வரும் ஜனவரி 10, 2017 அன்று மாலை 05.00 மணியளவில் சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் இல்லம் அருகில் தமிழ் மாநிலக் குழு சார்பில் ஒரு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதற்கான போஸ்டர் தற்போது கீழே பார்க்கலாம்.
எனவே அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் , குறிப்பாக சென்னை பெரு நகர மண்டலத்தில் உள்ள அனைத்து அஞ்சல் பகுதி NFPE இயக்கத் தோழர்களும் தவறாமல் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு அரசுக்கும் , அதிகார வர்க்கத்திற்கும் நம்முடைய போராட்ட வீச்சினை எடுத்துக் காட்ட வேண்டுகிறோம்.
மேலும் நம்முடைய NFPE சம்மேளனத்தின் சார்பில் இந்த வேலை நிறுத்தம் தொடர்பாகவும், அஞ்சல் பகுதியில் தீர்க்கப்படாமல் தேங்கி கிடைக்கும் பிரச்சினைகளை தீர்த்திடக் கோரியும் 20 மற்றும் 21 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்வரும் 05.01.2017 அன்று அனைத்து கோட்ட /கிளைகள் மற்றும் மாநிலத் தலைமையகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வேலை நிறுத்தத்திற்கான நோட்டீசை நிர்வாகத்திற்கு அளித்திட நம்முடைய சம்மேளனம் தாக்கீது அனுப்பியுள்ளது.
No comments:
Post a Comment