Thursday 24 November 2016

FINANCE MINISTRY AND DEPT. OF POSTS EXCLUDED PO SAVINGS ACCOUNTS FROM EARLIER ORDERS OF FIN. MIN

FINANCE MINISTRY AND DEPT. OF POSTS EXCLUDED PO SAVINGS ACCOUNTS FROM EARLIER ORDERS OF FIN. MIN

இதுவெல்லாம் நிமிடத்திற்கு நிமிடம் வேகமாக நடக்கும் நம் இலாக்காவில் . ஆனால்  இரவு  பகல் , விடுமுறை நாள் , ஞாயிறு என்று பணி  செய்த ஊழியர்களுக்கு வங்கிகள் போல ஒரு நாள்  ஊதியம் அல்லது ரூ. 3000/- கேட்டால்  தோசைக்  கரண்டியை  திருப்பி  காலில் சூடு வைப்பார்கள் நம் அதிகாரிகள் .  

அரசுக்கு கொள்கை ரீதியாக ஆபத்துக் காலத்தில் ராணுவம் போல நம் ஊழியர் பணி  செய்யத் தயார் தான் . ஆனால்  பட்டை நாமம் குழைத்துப் போட்டு  கொத்தடிமையாக  வேலை வாங்க நம் அதிகாரிகள்  தயாராக இருக்கிறார்களே ?  இது தான் இன்றைய தேசம் .

இதுதான் கொடுமை . இதற்கெல்லாம்  முடிவு கட்டும் நாள் எந்நாளோ  ? தமிழகம் எடுத்துக்காட்டாக ஊழியர் நலன் காக்க தயாராவோம். 22 மாநிலங்களை நாம் எதிர் நோக்க வேண்டாம். மேல் மட்ட அமைப்புகளை நாம் எதிர் நோக்க வேண்டாம் . எப்போதும் போல முன்கை  எடுக்க தயாராவீர் தோழர்களே !


No comments:

Post a Comment