Thursday 20 October 2016

NFPE & FNPO P3, P4, GDS ஊழியர்கள் இணைந்து கும்பகோணம் HPO-ல் ஆர்ப்பாட்டம்

NFPE & FNPO  P3, P4, GDS ஊழியர்கள் இணைந்து கும்பகோணம் தலைமை அஞ்சல் நிலைய வாசலில்  இன்று மாலை 

6 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


GDS ஊழியர்களின் உயர் போனஸ் மற்றும் CCL கோரிக்கையை நடைமுறைபடுத்த , மத்திய அரசு மற்றும் இலாக்கா காலதாமதம் செய்யும் நடவடிக்கையை  எதிர்த்து அகில இந்திய JCA 4 கட்ட போராட்டத்தை அறிவித்துள்ளது. NFPE & FNPO பொறுப்பாளர்கள் இணைந்து GDS ஊழியர்களின் உயர் போனஸ் 7000  சீலிங் மற்றும் CCL கோரிக்கையை பெற்றுத்தர இப் போராட்டத்தை  சிறப்பாக நடத்தினர்.


இப்போராட்டத்தில் பேசிய அனைவரும், "  தீபாவளிக்குள் இந்த உயர்த்தப்பட்ட 7000  சீலிங் போனஸ் மற்றும் போனஸ் நிலுவை தொகையை வழங்காவிட்டால் அகில இந்திய அளவில் வருகிற நவம்பர் மாதம் 9-11-16  முதல் 10-11-16 வரை  2  நாட்கள் தொடர் வேலை நிறுத்தத்தை NFPE & FNPO  இணைந்து அறிவித்துள்ளது.இதுதான் ஒருங்கிணைந்த கூட்டு போராட்டம்.

இதில் அனைவரும் கலந்து கொள்ளும்படி "  வலியுறுத்தினார்கள்.

ஆர்ப்பாட்ட காட்சிகள் சில  உங்கள் பார்வைக்கு .










No comments:

Post a Comment