இனிய தோழர்களே ! தோழியர்களே,
தொழிற்சங்க ஜனநாயகத்தின் குரல்வலையை நெறித்திடும் மண்டல மாநில அஞ்சல் நிர்வாகங்களை கண்டித்தும்...
அஞ்சல் ஊழியர்களை கசக்கிப் பிழியும் கண்மூடித்தனமான உத்தரவுகளை கைவிட கோரியும் ...
மற்றும் அஞ்சல் ஊழியர் நலம் சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரியும் .
பேசிப் பார்த்தோம் ; கேட்டுப் பார்த்தோம் ; எழுதிப் பார்த்தோம் ; SUBJECTS கொடுத்தோம் ;
அகில இந்திய சங்கத்திற்கு எடுத்துச் சென்றோம் ; ஆர்ப்பாட்டம் செய்தோம் ; தார்ணா இருந்தோம் ;
NOTICE போட்டோம் ; போஸ்டர் போட்டோம் : வேலை நிறுத்த நோட்டீஸ் அளித்தோம் ;
கோரிக்கை மனு கொடுத்தோம் ; வேலை நிறுத்தத்தில் தள்ளியது நிர்வாகம் ;
இதுவா நிர்வாகம் ; இதுவா அரசாங்கம் ? நடத்துபவர்கள் இந்தியர்கள் தானே ?
அவர்களுக்கு இந்திய அரசியல் அமைப்பு சட்டங்கள் தொழிலாளர் நல சட்டங்கள் செல்லாதா ?
இது அப்பட்டமான அரசியல் அமைப்புச் சட்ட மீறல் ! மனித உரிமை மீறல் !
UNFAIR LABOUR PRACTICE என்று தொழிலாளர் நல ஆணையரே பதிவு செய்யும் அவலம்
ஒரு நாள் இந்த நிலைமைக்கெல்லாம் மாறுதல் உண்டு. அந்த மாறுதலை செய்வதற்கு நல்ல நாள் இன்று !
26.3.2015 இன்று NFPE அஞ்சல் 3, அஞ்சல் 4, GDS -NFPE உள்ளடக்கிய NFPE சம்மேளனம்சார்பாக கும்பகோணத்தில் 26.03.2015 ஒரு
நாள் வேலைநிறுத்த ஆர்ப்பாட்டம் நடந்தது
ஆர்ப்பாட்டத்தை NFPE P3 கோட்டச்செயலர் தோழர் பெருமாள் அவர்கள் ஒருங்கிணைப்பாளராக இருந்து மிகச்சிறப்பாக
நடத்தினார். P3 தலைவர் தோழர் பிரபாகரன் அவர்கள், தோழர் ஜோதிஅவர்கள், P4 கோட்டச்செயலர் தோழர் அய்யப்பன் அவர்கள்,
P4 பொருளாளர் தோழர் மாணிக்கம் அவர்கள், GDS NFPE கோட்டச்செயலர் தோழர் தம்பிராஜ் அவர்கள் நாம் அனுபவித்து வரும்
பிரச்சனைகளை சுருக்கமாக சிறப்பாக எடுத்துக்கூறினர்.
ஆர்ப்பாட்டக்காட்சிகள்
No comments:
Post a Comment