அன்புத் தோழர்களுக்கு வணக்கம். கடந்த 27.1.2016 அன்று PMG, CCR அவர்களுடன் தமிழக அஞ்சல் JCA சார்பில் நடத்திய பேச்சு வார்த்தை குறித்தும் அதன் வெளிப்பாடாக அளிக்கப்பட்ட வாக்குறுதியும் உங்களுக்கு தெரிவித்திருந்தோம். மேலும் அதன் மறுநாள் DPS CCR அவர்களும் பிரச்சினை தீர்க்கப்பட உத்திரவு அளிக்கப்பட உள்ளது என்று தெரிவித்திருந்தார். ஆனால் , அளிக்கப்பட்ட உறுதி மொழி களுக்கு மாறாக, தபால்காரர் பணிகளுக்கு பதிலி அளிக்க அனுமதிக் காமல் மேலும் பணிகளை நெருக்குவதற்கான உத்திரவு வெளியிடப் பட்டது.
பணியிழந்த 27 CASUAL ஊழியர்களையும் குறைந்தபட்ச தினக் கூலி அடிப்படையில் PICK UP AGENT , MARKETING பகுதி, COLLECTION , PASTING, PINNING என்ற BPC வகைப் பணிகளை, அதுவும் கூட , எந்தவித உத்திரவும் இல்லாமல் வாய்மொழியாக பணியளிக்க நிர்வாகத்தினர் அழைத்தனர்.
இது ஏனென்றால் , SPEED மற்றும் BUSINESS PARCEL PICK UPக்கு ஆகும் செலவு மட்டுமே ரூ. 86000/- வரும் என்று SENIOR MANAGER, MMS தெரிவித்ததாலும், வேறு எதுவும் செய்ய இயலாதென்று அவர் கை விரித்ததாலும், 10 நாட்களாக வணிகப் பணிகள் முடங்கியதாலுமே இந்த முடிவு. மேலும் இவர்கள் PICK UP மட்டுமே செய்வார்கள். BOOKING , DESPATCH க்கு மீண்டும் வேறு ஆள் தேடவேண்டும். அதற்கான ஒரு மாத செலவு என்பது மேலும் கூடுதலாகும்.
அதுவும் இரண்டு VAN மட்டுமே DIVERT செய்ய முடியும் என்றும் , அதற்கு இரண்டுOUTSOURCED DRIVER ( மீண்டும் புதிய CASUAL LABOURER) தனியேஅமர்த்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர்தெரிவித்ததே காரணம் . ஆனால் ஏற்கனவே இருக்கும் CASUALஊழியர்களுக்கு மாதம் ரூ.50000/- கூட செலவு செய்யவில்லை நிர்வாகம்.
ஆக நிர்வாகத்தின் வீண்பிடிவாதத்தால்கடந்த 10 நாட்களில் ஆயிரக் கணக்கான SPEED மற்றும் BUSINESS PARCEL சேவை பாதித்தது மட்டுமல்லாமல், தபால் காரர்களை COMBINED DUTY போட்டதால் ஆயிரக்கணக்கில்தபால்டெலிவரி சேவைபாதிப்பும் உள்ளாகியுள்ளது. இந்த நிலைஅண்ணா சாலையில் மட்டு மல்ல சென்னை GPO விலும்தான். கிட்டத்தட்ட இதே நிலைதான்சென்னை FGN POST, வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னைமற்றும் தாம்பரம் கோட்டங்களிலும்.
எனவேஇது குறித்து முடிவெடுக்க NFPE மற்றும் FNPO தமிழ் மாநில JCA கூட்டம்2.2.2016 அன்றுசென்னை பூங்கா நகர்தலைமை அஞ்சலகத்தில் கூட்டப்பட்டது. இதில் NFPE மற்றும் FNPO சங்கங் களின்பெரும்பகுதி மாநிலச் செயலர்கள், மாநில நிர்வாகிகள், சென்னை பெருநகரகோட்ட/ கிளைச் செயலர்கள் கலந்து கொண்ட னர். இதில்மேலே கண்ட தபால்காரர் /MTS மற்றும் CASUAL ஊழியர்கள் பிரச்சினை மட்டுமல்லாமல், இதரபகுதிப் பிரச்சினைகளும்பேசப்பட்டன.
இறுதியில் மேலேகண்ட இரண்டு பிரச்சினைகளுடன், தமிழகத்தில் ஊழியர்களை பாதிப்புக்குள்ளாக்கும்அஞ்சல், RMS பகுதிகளின் மிகமுக்கிய (HARASSMENT OF STAFF IN THE NAME OF TARGET உள்ளிட்ட) பிரச்சினைகளைஉள்ளடக்கிதமிழகம் தழுவிய அளவில் JCA சார்பில்
மூன்று கட்ட போராட்டத்தைநடத்துவதென்றுமுடிவெடுக்கப் பட்டது.
அனைத்து சங்கங்களையும் கலந்துகொண்டு இதற்கான சுற்றறிக்கை எதிர் வரும் 08.2.2016க்குள் தயார் செய்துஅனுப்புவதுஎன்றும் ,
மூன்றாவது வாரத்தில் தமிழகத்தின்அனைத்துகோட்டங்களிலும் JCAசார்பில் கோரிக்கைகளை வலியுறுத்திமுதற் கட்டம் கண்டன ஆர்ப்பாட்டம்நடத்துவது - கோரிக்கை மனு அளிப்பதுஎனவும் ,
பிரச்சினை தீர்க்கப்படவில்லை எனில் , நான்காவதுவாரத்தில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்வது எனவும், அதற்குப் பிறகும் நிர்வாகம்பேச்சு வார்த்தை நடத்திபிரச்சினைகளைதீர்க்கவில்லை எனில்,
மூன்றாவதுகட்டம்தமிழகம் தழுவியஅளவில்முழுவேலைநிறுத்தம் அறிவிப்பது என்றும், இதற்கானதேதி மற்றும்கணக்கீடுஇரண்டாவது கட்ட போராட்டத்தின்போது JCAவின்தலைவர்களால்அறிவிக்கப்படும் என்றும்முடிவெடுக்கப்பட்டது.
கேட்டுப் பார்ப்போம் ! பேசிப் பார்ப்போம் !
கோரிக்கை மனு அளித்துப் பார்ப்போம் !
ஆர்ப்பாட்டம் நடத்திப் பார்ப்போம் !
உண்ணா நோன்பிருப்போம்!
இதன் பிறகும் கேளாச் செவியினராய் இருப்பார்களேயானால்
No comments:
Post a Comment